Sunday, December 28, 2008

இஸ்லாமிய (ஹிஜ்ரி 1430) புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் என் இதயங்கனிந்த இஸ்லாமிய (ஹிஜ்ரி 1430) புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், உலகம் முழுவதும் அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் நிலவ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

அன்புடன்
A.அப்துல் முத்தலிப்
குவைத்

Tuesday, December 23, 2008

உலக வல்லரசின் இன்றைய நிலை ?

உலகத்தின் காவல்காரன், பெரியண்ணன் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இன்றைய உண்மை நிலை தெரியுமா உங்களுக்கு,

இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் டாலர் கடன் வாங்கி செலவிட்டுத்தான் கடத்தப் படுகிறது.

அமெரிக்காவில் கடன் இல்லாத எந்த குடிமகனும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே கடன்காரர்களாக உள்ளனர்.

அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டுகள்) மொத்தம் நூற்றி ஐம்பது கோடி.

அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையே முப்பது கோடிதான்.

அப்படியானால் சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் ஐந்து கடன் அட்டைகளை வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு ஒரு கடன் அட்டைக்கும் எவ்வளவு கடன் இருக்கும் என்று நீங்களே கணக்கிடுங்கள்.

ஒட்டு மொத்தமாக எல்லா அமெரிக்கக் குடிமகன்கலுமே கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்று அமெரிக்கக் குடும்பங்களின் சேமிப்பு மைனஸ் 22 % என்பதில் இருந்து அவர்களின் நிலை உணர முடிகிறது.

எந்தக் குடும்பமும் சேமிக்கும் நிலையிலேயே இல்லை, எல்லாக் குடும்பங்களும் கடனில் சிக்கி உழல்கின்றன.

33 மில்லியன் அமரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஏழைகள்.

தினந்தோறும் 20 மில்லியன் அமெரிக்கர்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

சமூக சீரழிவுகள்:

ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப் படுகிறாள்.

20 % பள்ளிச் சிறுமிகள் தாய்மை அடைகின்றனர்.


பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு ஆறு வயதிற்கும் கீழேயான குழந்தைகள்.

15-19 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வருடத்திற்கு 3500 பேர் சராசரியாகக் கொலை செய்யப் படுகின்றனர்.

இந்த வயதை ஒத்த 150,000 இளைஞர்கள் வன்முறைகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஆண்டு தோறும் கைதாகின்றனர்.

உலகின் அசைக்க முடியாத வல்லரசு என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு ஏன் இந்த இழிநிலை?

உழைத்துச் சேர்த்த சொத்துதானே நிலைக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் எத்தனை நாள் நிம்மதியாக இருந்து விட முடியும்.

அமெரிக்கர்கள் தாங்கள் மற்ற நாடுகளுக்கு எதிராகச் செய்த சதிகள், அராஜகங்கள், அட்டூழியங்கள் ஆகியவற்றின் பலனை இப்போது அனுபவிக்கத் தொடங்கி விட்டனர்,

தங்களது புத்திசாலித் தனங்களாலும், தங்களுடைய கடினமான உழைப்பாலும் உலகின் ஒரே வல்லரசாக முன்னேறியதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கர்கள் உண்மையிலேயே தங்களின் மேன்மை நிலையை நேர்மையாக அடையவில்லை.

ஆரம்பம் முதலே அமெரிக்கர்கள் மற்ற நாடுகளை தங்களின் திட்டமிட்ட சதிச் செயல்களாலும் , மிரட்டல்களாலும், வஞ்சக சூழ்ச்சிகளாலும், உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதாலும் வளர விடாமல் ஒடுக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செய்து வந்தனர்.

அமெரிக்கர்கள் தங்களுடைய குறுக்குப் புத்தியினால் பெற்ற வெற்றிகளைப் போலவே இன்று அதனாலேயே தங்கள் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்க இயலாமல் தவிக்கின்றனர்.

அவர்களின் சதிச் செயல்கள் பற்றிப் பார்க்கும் முன்னர் அமெரிக்கர்கள் எப்படி இந்த மேன்மை நிலையை அடைந்தார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்காவின் பொருளாதாரம் சமீபத்தில் நிலை குலைந்த போது அதன் தாக்கம் இன்று உலக நாடுகள் எல்லாவற்றிலுமே எதிரொலிக்கிறது.

உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் அடக்குமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப் படும் பொது அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய தேக்க நிலையை அடைகின்றன.

உண்மையிலேயே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உலகம் இருக்கிறதா?

உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்கர்கள் காட்டும் திசையில்தான் பயணிக்குமா?

இன்று உலக நாடுகள் எல்லாவற்றின் மீதும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதாகவே உணரப் படுகிறது. உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்ற தோற்றம் எப்படி உண்டானது?

அமெரிக்கர்களின் பலம் என்ன?

இயற்கை வளங்கள்:

உலகின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களில் 50 % அமெரிக்காவில்தான் உள்ளது.

அதாவது மற்ற எல்லா உலக நாடுகளும் சேர்ந்து எந்த அளவு இயற்கை வளங்களை பெருள்ளனவோ அந்த அளவு இயற்கை வளங்களை அமெரிக்கா மட்டுமே பெற்று அனுபவித்து வருகிறது.

மக்கள்தொகை:

உலகின் மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே.

உலகில் உள்ள 50% இயற்கை வளங்களை உலக மக்கள் தொகையில் 4% மட்டுமே உள்ள அமெரிக்கர்கள் அனுபவிக்கின்றனர்.

மற்ற உலக நாடுகளில் உள்ள 96 பேர் எந்த அளவு இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியுமோ , அந்த ளவு இயற்கை வளங்களை வெறும் 4 அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த ளவு இயற்கை வளங்களைத் தங்கள் கையில் வைத்திருப்பது அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் ஆகும்.

தங்கம்:

உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 70% - 80% அளவிற்கு அமெரிக்கர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இன்று பெரும்பாலான நாடுகளில் மிக விலை உயர்ந்த பொருளாக மதிக்கப் படும் தங்கம் நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் வசமே உள்ளது.

மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்துவது:

உலக நாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்காவின் முதலீடு அதிகமாக இருக்கும் படி செய்வது.

உலக நாடுகளில் பெரும்பாலான தொழில்களை அமெரிக்க நிஇருவனன்களே செய்கின்றன, அல்லது அந்த நாடுகளின் முக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு அதிக அளவில் இருக்கும்.

இப்படிப் பட்ட முதலீடுகள் மூலம் அந்த நாடுகளின் தொளிதுரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அந்த நாடுகளின் மற்ற நிறுவனங்களை நசுக்கி ஒடுக்குவது.

இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரமே இவர்களின்முதலீட்டின் அடிப்படையில் இருக்குமாறு செய்து அந்த நாடுகளைக் கட்டுப் படுத்துவது, அவர்களின் முன்னேற்றத்தை ஒடுக்குவது என்பவை அமெரிக்காவுக்கு சாத்தியமாகிறது.


அமெரிக்காவில் முதலீடு:

அமெரிக்காவில் மற்ற நாடுகளின் முதலீடு குறைந்த அளவில் இருக்குமாறு செய்வது.

அமெரிக்காவின் மற்றொரு புத்திசாலித் தனமான வஞ்சகத் திட்டம், "மற்ற நாடுகளில் அமெரிக்க முதலீடுகளைக் குவிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல தனது நாட்டில் மற்ற நாடுகளின் முதலீடுகள் அதிகம் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது".

இதனால் அமெரிக்காவின் தொழில்துறையும், பொருளாதாரமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முடியும்.

டாலரை உலக கரன்சி ஆக்கியது:

உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கைள் அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு நடக்க செய்தது.

அமெரிக்க டாலரின் மதிப்பு அவர்களின் தங்கக் கையிருப்பைப் பொறுத்து கணக்கிடப்படும்.

அதாவது அமெரிக்க பெடெரல் வங்கி தான் மக்களிடையே புழக்கத்தில் விடும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கையிருப்பில் வைக்கும்.

அதாவது அந்த டாலரானது கையிருப்பில் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பைப் பெரும்.
ஆனால் மற்ற பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் புழக்கத்தில் விடும் பணத்தின் மதிப்பிற்கேற்ப டாலரைக் கையிருப்பில் வைக்கின்றன.


எனவே ஒவ்வொரு நாட்டின் அந்நியச் செலாவணி (அதாவது டாலர்) கையிருப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு அமைகிறது.

இது போல பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரமே அந்த நாட்டின் டாலர் கையிருப்பைப் பொறுத்துதான் மதிப்பிடப் படுகிறது.

இதனால் டாலர் என்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கினை வகிப்பது போன்ற நிலையை உருவாக்கி விட்டனர்.

சிந்திப்போம். ஒன்றுபடுவோம். .
வளமான பாரதத்தை வல்லரசாக்குவோம் இன்ஷா அல்லாஹ் . . .

Thursday, December 11, 2008

மலேகானும், மக்கள் தீர்ப்பும்!

ஐந்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பல்வேறு உணர்வுகளை - அதிர்ச்சி, ஆனந்தம், எமாற்றம், வெற்றி, தோல்வி - என அனைத்து உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவது, பாராளுமன்றத்தையே கைப்பற்றுவது போல் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும். ஆனால் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மக்களின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது. டெல்லி மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதுதான் சங்பரி வாரங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாகும்.
கடந்த தேர்தலில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 56 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் இம்முறை 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் 2003 - தேர்தலில் 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஏறக்குறைய இருமடங்காக 71 இடங்களை கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறை 37 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஒன்று கூடுதலாகி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலேறுகிறது.
டெல்லி மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் சென்ற முறை பா.ஜ.க.வின் ஆளுகையில் இருந்தவை. இவற்றில் மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அம்மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வாக்குகளின் சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு மாற்றம். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் இருந்த பா.ஜ.க. 42 சட்டமன்ற தொகுதிகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.
இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. முன்னிறுத்தியது நாடெங்கும் நடக்கும் தீவிரவாத - பயங்கரவாத தாக்குதல்களைத்தான். பயங்கரவாத செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்யவில்லை என்றும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கடுமையான சட்ட ஷரத்துகளோடு கொண்டு வந்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியுமென்றும் பசப்பியது. காங்கிரஸ் கட்சி கையாலாகாத கட்சி என்றும், தேச பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையே இல்லையென்றும், பா.ஜ.க. மட்டுமே தேச நலனைப் பற்றி சிந்திக்கும் - பாடுபடும் தேசபக்தி மிக்க கட்சி என்றும் தம்பட்டமடித்தது.
ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் இந்த பசப்பு வார்த்தை காரர்களுக்கு புரியவைத்துவிட்டது. படுதோல்வி கண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேயின் வார்த்தைகளில் கூறுவதென்றால், ஷஷமக்கள் எப்போதுமே அறிவாளிகள். அவர்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைத்தான் அறிவாளிகள் என்கிறார். அப்படியெனில் பா.ஜ.க-விற்கு வாக்களித்த வர்களை முட்டாள்கள் என சொல்லாமல் சொல்கிறாரா?
இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தீவிரவாத - பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி மக்களைக் கவரவில்லை. காரணம், மலேகான் குண்டுவெடிப்பு சதிகளில் பா.ஜ.க.வின் நடவடிக்கை - அதன் தேசபக்த முகமூடியைக் கிழித்து, அதன் பயங்கரமான பாசிச முகத்தை - ரத்த வெறி கொண்ட சங்பரிவார முகத்தை - அழுகிப்போன இந்துத்துவா முகத்தை - மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மக்களும், தங்களின் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து இந்தியராக ஒன்றுபட்டு எழுந்து நின்று தீவிரவாதத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த நேரத்தில், மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முயன்றது பா.ஜ.க. அதன் மலிவான தேர்தல் உத்தியை மக்கள் இனம் கண்டு நிராகரித்துவிட்டனர் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.
மலேகான் சதிகாரர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வக்காலத்து வாங்கி பேசியதுடன், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை மிகவும் இழிவாகப் பேசியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் உளுத்துப் போன ஷஇஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஊளையை, மலேகான் சதித்தனம் அடையாளம் காட்டி விட்து. பா.ஜ.க.வின் ஊசிப் போன தேசபக்தியை மக்கள் நம்பவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
இனி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., புதிய முகங்களையும், புதிது புதிதாக முகமூடிகளையும் மாட்டிக்கொண்டு வரும்போது மக்கள் அதன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அறைய தயாராகிவிடுவார்கள்.


நன்றி: வெ. ஜீவகிரிதரன்
மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் அணி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Sunday, December 7, 2008

ஈத் முபாரக். . .

உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் என் இதயங்கனிந்த தியாகத்திருநாள், ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்

A.அப்துல் முத்தலிப்
குவைத்



Thursday, December 4, 2008

சிந்தியுங்கள் . . .

வேண்டாம் டிசம்பர்-06 ம் நாள் (வெற்று) கோஷப் போராட்டம்

அருமையான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . .

1992 ம் வருடம் டிசம்பர் 6 ம் நாள் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடூர நாள். அந்த நாளை எந்த ஒரு முஸ்லிமாலும் மறக்க முடியாத கருப்பு நாள். இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இந்து மத வெறியர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட நாள்.

டிசம்பர்-06 ம் நாளை அமைதி நாளாக, சமூக நல்லிணக்க நாளாக, உறுதிமொழி ஏற்கும் நாளாக கடைபிடியுங்கள். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இந்த டிசம்பர்-06 ம் நாளை இஸ்லாம் காட்டித்தரும் வழியில் கடைபிடியுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் போர் வீரர்களுக்கு உதவி செய்வதற்காகத் தான் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்களேத் தவிர ஆண்களுக்கு இணையாக போராட்டத்தில் கலந்துக்கொள்ள அல்ல என்பதை உணர வேண்டும்.

பெண்களை கண்ணியமாக கருதும் இஸ்லாம் ஒருபோதும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.

பெண்களை அழைத்து போராடும் எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் வீரியம் நிறைந்த அமைப்பாக இருக்கமுடியாது. போராடுவதால் விழிப்புணர்வு ஏற்படும் என்று சொல்வதும் மடமையாகும். விழிப்புணர்வு போராட்டத்தில் இல்லை.

பெண்கள் சத்தமாகக்கூட அன்னிய ஆடவர்களுக்கு முன்னால் பேசக்கூடாது என்று சொல்லும் மார்க்கத்தில் கோஷம் போட அனுமதி உண்டா? பெண்கள் பூசும் நறுமணம்கூட அன்னிய ஆடவர்களுக்கு படாதவாறு இருக்கவேண்டும் என்று சொன்ன மார்க்கத்தில் ஆடவர்களோடு இணைந்து போராட அனுமதி கொடுத்தது யார்?

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மட்டுமல்ல எந்த ஒரு போராட்டத்திலும் பெண்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. அப்படி அனுமதிமட்டுமிருக்குமேயானால் நம் உயிரிலும் மேலான தலைவர், அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைப்பெற்ற இஸலாமிய முதல் யுத்தமான பத்றுப் போரில் சத்திய ஸஹாபா பெருமக்கள் தங்கள் மனைவி மற்றும் பெண் மக்களை கலந்துக் கொள்ள செய்திருப்பார்கள்.

அருமையான முஸ்லிம்களே சிந்தியுங்கள்.


நம் உயிரிலும் மேலான தலைவர், அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைப்பெற்ற எந்தப் போரிலாவது பெண்கள் கலந்து கொண்டிருக்கிறார்களா? ஆகவே பெண்களை கண்ணியமாக நடத்துங்கள். பெண்களை போராட்டக் கள பாதுகாப்பு அரணாக நிறுத்திவிடாதீர்கள்.

இஸலாம் கூறும் வழியில் போராடி பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கக்கூடியவர்களுக்கும் பாடம் கற்பியுங்கள்.

இஸ்லாம் கூறும் வழியில் போராடினால் இழந்தவைகளும் திரும்பும் முஸ்லிம்களுக்கு தீங்கிழைத்தவர்களும் ஹிதாயத் பெற (அல்லாஹ் நாடினால்) வாய்ப்பு ஏற்படும்

நன்றி:அபூ மஹ்தி

Tuesday, December 2, 2008

அரஃபா நோன்பின் மாண்பு

ரமலான் மாத கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபா தின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும். அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கிய கிரியைகளில் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்கு செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார்(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும் தான் நோற்க வேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி


அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஒரு உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காக சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணார கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னை படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்பு தேடுவதும் பல மணித்துளிகளுக்கு இவ்வுலக சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.

அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்கு மாறாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ் ஆரம்ப பத்து நாட்கள் முழுவதும் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளது தான் இதற்குக் காரணமாகும்.

அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களை விட வேறெந்த நாட்களும் இல்லை. அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதை விடவா? என்று வினவ, ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை விட என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லையெனில் அது மிகவும் சிறந்த செயலே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: புகாரி


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.

நான் நபி(ஸல்) அவர்களை (இந்த)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாக அறவே பார்த்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

மற்றவரை விட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களை விட இந்த நாட்களில் அல்லாஹ்வை துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயற்சிக்க வேண்டும்.

நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான் மாத கடமையான நோன்பைத் தவிர தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டி நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்த செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதே நேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வை புகழ்தல், இஸ்திக்ஃபார் அதாவது பாவமன்னிப்பு தேடுதல், ஸதகாத் தர்மங்கள் செய்வது போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும், பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம் & சத்தியமார்க்கம்.காம்

Sunday, November 30, 2008

ஆர்பாட்டத்தில் அணிவகுக்கும் பெண்களே! இதைகொஞ்சம் படியுங்கள்!!

தமிழகத்தில் எண்பதுகளுக்கு முன்னால், முஸ்லீம் பெண்கள் அவசிய,அவசர தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வருபவர்களாக இருந்தனர்.[சிலர் விதிவிலக்காக இருந்திருக்கலாம்] ஆனால் தவ்ஹீத் எழுச்சிக்கு பின்னால், நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும்கடமை பெண்களுக்கும் உண்டு என்ற பிரச்சாரத்தின் காரணமாகபல்லாயிரம் ஆண்கள் கூடியிருக்கும் கூட்டத்தில் மேடையேறி பெண்கள் கர்ஜிக்கிறார்கள். ஆர்பாட்டம் என்ற பெயரால் அந்நிய ஆடவர்கள் முன் அணிவகுத்து நின்று தங்களின் குரலை உயர்த்தி கூக்குரலிடுகிறார்கள். கணவர் வெளிநாட்டில் இருக்க, மஹ்ரமில்லாமல் பயணம் செய்து சிலர் மாநாட்டில் பங்கெடுக்கிறார்கள். இப்படி பெண்களை தமது அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கும் சமுதாய தலைவர்கள் மார்க்கத்தில் இதற்கு அணுமதி உண்டு என்று கூறி சில ஆதாரங்களை முன்வைக்கிறார்கள். அந்த ஆதாரங்கள் சரியா என்பதை முதலில் பார்ப்போம்.'நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கைகொண்ட பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள் தீமையை தடுப்பார்கள்.'[அல்-குரான்]இந்த வசனத்தை ஆதாரமாக காட்டும் அவர்கள், நபி[ஸல்] காலத்தில் எந்த நபித்தோழியர்கள் மேடையேறி ஆண்கள் முன்னால் கர்ஜித்தார்கள்..?
எந்த ஆர்பாட்டத்தில் பங்கெடுத்தார்கள் என்று காட்ட தயாரா..?மிக அதிகமான ஹதீஸ்களை மணனம் செய்து அறிவித்த அறிவுச்சுடர் அன்னை ஆயிஷா[ரலி]அவர்கள், தாவா செய்கிறேன் என்ற பெயரில் ஆண்களை திரட்டி வைத்துக்கொண்டு பேசியதுண்டா..? சந்தேகம் என்று வீட்டு தேடி வந்தவர்களுக்கே மார்க்கத்தை சொல்லியுள்ளார்கள். மேலும் ரசூல்[ஸல்] அவர்கள், பனுசுளைம் குலத்தவருடன், எழுபது நபிதோழர்களை தாவா செய்ய அனுப்பினார்களே, அதுமாதிரி எந்த பெண்கள் படையையாவது தாவா செய்ய அனுப்பினார்களா..? குறைந்தபட்சம் பெண்கள் மத்தியிலாவது தாவா செய்ய பெண்கள் படையை நபி[ஸல்] அனுப்பியதுண்டா..? எனவே, இந்த வசனத்தை ஆதாரமாககாட்டமுடியாது. அடுத்து ,ரசூல்[ஸல்] அவர்கள் போர்களத்திற்கு தம்முடைய மனைவியரில் யாரேனும் ஒருவரை அழைத்து சென்றதையும், சில நபித்தோழியர்கள் போரில் உதவி செய்ததையும் ஆதாரமாக வைத்து, முஸ்லீம் பெண்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்வது ஏற்ப்புடையதல்ல. ரசூல்[ஸல்] அவர்கள் பெண்களை போர்களத்திற்கு வாருங்கள் என்று எப்போதும் அழைப்பு விடுத்ததில்லை. அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள், அறிவிக்கிறார்கள்.
நான் ரசூல்[ஸல்] அவர்களிடத்தில் நாங்களும் [பெண்களும்] ஜிஹாத் செய்யலாமா..? எனக்கேட்டேன். அதற்கு நபி[ஸல்] பெண்களுடைய சிறந்த ஜிஹாத் பாவம் கலக்காத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் ஆகும். [புஹாரி2784] என்று நபி[ஸல்] கூறிய பொன்மொழியை இங்கு நினைவு படுத்துகிறோம். ஒரு வாதத்திற்கு இதை ஆதாரமாக கொண்டால்கூட தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் தங்கள் மனைவியரில் ஒருவரையும், பணிவிடை செய்வதற்காக மஹ்ரமான பெண் வாலண்டியர்கள் சிலரையும் அழைத்து செல்லலாம். ஏனெனில் அன்று போர்களத்தில் பங்கெடுத்த பெண்கள் கத்திக்கொண்டிருக்கவில்லை. மாறாக காயம்பட்டோருக்கு உதவிகள்தான் செய்துள்ளனர். எனவே இதை ஆதாரமாக கொண்டு சமுதாய பெண்கள் அனைவரையும் ரோட்டில் நிறுத்துவது சரியல்ல.பெண்கள் வீட்டில்தான் இருக்கவேண்டியவர்கள் என்பதற்குஉள்ள ஏராளமான ஆதாரங்களில் சில;அவரது [மர்யமின்] அறைக்கு ஜக்கரிய்யா [அலை] சென்றபோதெல்லாம் அவரிடம் உணவைக்கண்டு, மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார்கள். [வசனசுருக்கம், சூரா ஆல இம்ரான்]இந்தவசனத்தில் மர்யம்[அலை] அவர்களை ஜக்கரிய்யா[அலை] அவர்கள் அறையிலேயே எப்போதும் பார்த்துள்ளார்கள். ரோட்டில் அல்ல.போருக்கு செல்லாமல் தங்கிவிட்டவர்களை பற்றி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்;வீட்டோடு இருக்கும் பெண்களைப்போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக்கொன்டார்கள்.[வசனசுருக்கம் - சூரா அல்தவ்பா]இந்தவசனத்திலும் அல்லாஹ் பெண்கள் வீட்டில் இருக்கவேண்டியவர்கள் என்பதால்தான் அவர்களை போருக்கு செல்லாதோருக்கு மேற்கோள் காட்டுகிறான்.உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக்காலத்தில் வெளிப்படுத்தி திரிந்ததுபோல் திரியாதீர்கள்.[வசனசுருக்கம் - சூரா அல் அஹ்ஸாப் ]இந்த வசனம் நபியின் மனைவியருக்கு மட்டும் பொருந்தும் என்று நாவலர்கள் கூறவருவார்களேயானால், நபியின் மனைவியரல்லாத மற்ற பெண்கள் அறியாமை காலத்தைப்போல் வெளிப்படுத்திக்கொண்டு திரியலாம்என கூறுவார்களா..?''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்"" (திர்மீதி)இந்த ஹதீஸ் மறைவாக இருக்கவேண்டியவர்கள் பெண்கள்என்று தெளிவாக கூறுகிறது. இன்னும் எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. விரிவஞ்சி தவிர்த்துள்ளோம்.எனவே பெண்களே,உங்கள் வீடுகளில் தங்கியிருந்து அல்லாஹ்வின் அருளை பெற முன்வாருங்கள்.
நன்றி : www.mugavai-abbas.blogspot.com நிழல்களும் நிஜங்களும்

Sunday, November 23, 2008

கோட்சே குடும்பத்துப் பெண்ணின் குரல்!

சனி, 22 நவம்பர் 2008
"ஹிந்து நாடான ஹிந்துஸ்தானைப் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை; இதனை அங்கீகரிக்காத முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் குடியேறி வாழ்ந்து கொள்ளட்டும்" என மாலேகோன் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள இந்துத் தீவிரவாத சாமியாரிணி ப்ரக்யா சிங்கின் அமைப்பான 'அபினவ் பாரத்'தின் தலைவி ஹிமானி சவார்க்கர் அறிவிப்புச் செய்துள்ளார்.


ஹிமானி, காந்திஜியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்ஸேயின் சகோதரன் கோபால் கோட்சேயின் மகளாவார். ஹிமானியின் கணவர், ஹிந்துத்துவ ஆச்சாரியன் சாவர்க்கருடைய மருமகன் ஆவார்.

"மாலேகோன் முதலான இடங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஹிந்துக்களின் நியாயமான எதிர்வினைகளாகும். தங்களுடைய மக்களுக்கு எதிராக நிரந்தரமாக அக்கிரமம் நடக்கும் வேளையில், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்ற தத்துவங்கள் எதுவும் இக்காலத்தில் விலை போகாது" என அவுட் லுக் தினசரிக்கு ஹிமானி வழங்கிய பேட்டியில் ஹிந்துத்துவ வாதிகளின் அட்டூழியங்களை நியாயப் படுத்தி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேற்கண்டவாறு கூறினார்.

"தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமே எங்களின் இலட்சியம். அதனைத் தடுப்பதில் அரசு தோல்வியடைந்தால், ஹிந்துக்கள் எதிர்வினையாற்றுவர். ப்ரக்யா சிங் துவங்கிய மாலேகோன் குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராகக் காவல்துறை சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சரியானவையே. தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்கள் எதிர்த் தாக்குதல் மட்டுமே நடத்தியுள்ளனர்" என ஹிமானி கூறினார்.

"துப்பாக்கியைத் துப்பாக்கி கொண்டே எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆர். ஆர். பாட்டீல் கூறியது தெரியுமில்லையா? எனில், வெடிகுண்டுக்குப் பதிலாக ஏன் வெடிகுண்டு ஆகக் கூடாது? மாலேகோன் வழக்கில் கைது செய்யப்பட்ட மேஜர் சமீர் குல்கர்ணி முதலானவர்கள், உண்மையில் தேசப்பற்று மிக்கவர்களாவர். தேசப் பற்றாளர்கள் மீது குற்றம் சுமத்தி, ஹிந்துக்களைப் பலவீனப் படுத்துவதற்கு அரசு முயல்கிறது" எனவும் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஹிமானி குற்றம் சாட்டினார்.

"குஜராத் கலவரம் முதலானவற்றில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என முஸ்லிம்கள் கூறுகின்றனர். மதத்தை முன் நிறுத்தியே அவர்கள் அவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். குஜராத் நிகழ்வைக் குற்றச் சாட்டாகச் சொல்பவர்கள் குடியேறுவதற்கு உலகில் பல முஸ்லிம் நாடுகள் உள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உடையவர்கள் அங்குச் சென்று வாழ்ந்து கொள்ளட்டும். ஹிந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை" எனவும் ஹிமானி கூறினார்.

மும்பைக் கலவரத்தைக் குறித்து சமர்ப்பிக்கப் பட்ட ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என ஹிமானி கூறினார். "குஜராத் கலவரம் குறித்த நானாவதியின் அறிக்கையிலும் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?" என்ற கேள்விக்கு, "அந்த அறிக்கையினைக் குறித்துத் எனக்கு அதிகம் எதுவும் தெரியாது; எதிர் தாக்குதல் நடத்துவது மனிதர்களிடையே சகஜமானது" என்று அவர் பதிலளித்தார்.

"தற்பொழுது நடப்பவை அனைத்தும் ஹிந்துக்களின் யதார்த்தமான எதிர்வினைகளே! ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டிக் கொண்டு நிற்க வேண்டுமோ? நாங்கள் எதிர்த்துத் தாக்கவே செய்வோம். அதற்காக ஹிந்துக்களுக்கு எதிராக எவராவது நடவடிக்கை எடுப்பின் அவர்களையும் நாங்கள் எதிர்ப்போம்" என ஹிமானி ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கை விடுத்தார்.

"ஜெர்மனியில் வசிப்பவர்களை ஜெர்மனியர் என்றும் பிரிட்டனின் வசிப்பவரை பிரிட்டீஷியர் என்றும் அழைக்கும் பொழுது, ஹிந்துஸ்தானில் வசிப்பவர்களை ஹிந்து என்று ஏன் அழைக்கக் கூடாது?" என அதிபுத்திசாலி(!)த் தனமான கேள்வி ஒன்றை ஹிமானி எழுப்பினார்.

"அனைவரும் ஹிந்துக்களான இந்த ஹிந்துஸ்தானை ஒரு ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும். இதனை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள் நாட்டை விட்டுப் போகலாம். தீவிரவாதத்தை அழிப்பதில் எந்த அரசு தோல்வியடைந்தாலும் அவர்களைத் தோற்கடிக்க ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். பங்களாதேசிகள் முதலான வெளிநாட்டவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" என அவர் கூறினார்.

***
ஒருமுறை குமுதம் இணையத் தொலைகாட்சியில் த.மு.மு.க. தலைவர் பேரா. ஜவாஹிருல்லாவுடனான நேர்முக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவி, ஒரு கேள்வியின் பொழுது, "இந்தியாவை மதசார்பற்ற நாடு எனக் கூறக்கூடாது. இந்தியாவில் மத சார்பற்ற அரசு நடக்கிறது என வேண்டுமானால் கூறலாம். விடுதலையின் பொழுது நேரு முதலானவர்கள் இப்புனித ஹிந்து மண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டனர். பாரம்பரிய ஹிந்து மண்ணான இந்தியா, ஒருபோதும் ஒரு மதசார்பற்ற நாடாக இருக்கவே முடியாது. எனவே இம்மண்ணை ஹிந்து மண், ஹிந்து நாடு என்று தான் அழைக்க வேண்டும்" என்று கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் எந்த அளவிற்கு இந்திய மக்களின் மனதில் விஷத்தை ஏற்றி மூளைச் சலவை செய்கிறது என்பதற்கு இதனைவிடச் சிறந்த வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை.

செய்யும் அக்கிரமங்களை நியாயப் படுத்துதல், தாங்கள் செய்வது தவறு என்பதை உணர்ந்து அதிலிருந்து விலகுவதை விடுத்து, செயற் படுத்தும் அத்தனை அக்கிரமங்களையும் தேசப்பற்றாக நினைத்துக் கொண்டு, ஒரு கற்பனை உலகத்தில் சஞ்சரித்தல் என ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி விட்டுள்ள இலட்சகணக்கான தொண்டர்கள், இந்தியாவின் இறையாண்மையையும் இந்திய மக்களின் ஒற்றுமையையும் தகர்க்கப் போகும் வெடிகுண்டுகள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்க வேண்டியது மத்திய-மாநில அரசுகளின், காவல்-நீதித்துறைகளின் கட்டாயக் கடமையாகும்.


நன்றி : சத்தியமார்க்கம்.காம்

தஞ்சை மாவட்டம், வஞ்சுவழி & வடக்கு மாங்குடியிலிருந்து இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் 2008 (ஹிஜ்ரி 1429) புனிதஹஜ் பயணம் செல்பவர்கள்:


காயிதேமில்லத் சாலை (மெயின் ரோடு) மௌலவி, அல்ஹாஜ் S.S. பஷீருத்தீன் அஹமது ஆலிம் அவர்களின் புதல்வரும், வஞ்சுவழி, வடக்கு மாங்குடி ஜும்'ஆ பள்ளியின் இணை பேஷ் இமாமுமான
மௌலவி, அல்ஹாபிழ், அல்ஹாஜ் S.B.நூருத்தீன் அஹமது ஆலிம் மிஸ்பாஹி,
அல்யாஸீன் தெரு நெருப்புகாடி
ஷம்ஷுத்தீன்
மற்றும் அவரது துணைவியார்
ஷம்ஷுன்னிஷா,
காயிதேமில்லத் சாலை (மெயின் ரோடு) மர்ஹும் சாந்து N. நஸ்ருதீன் அவர்களின் புதல்வரும், வழுத்தூர், சவுக்கத்துல் இஸ்லாம் மேனிலைப்பள்ளியின் பேராசிரியருமான
S.N.கமாலுதீன் M.sc., Med., M.phil.,
மற்றும் அவரது துணைவியார்
வஹிதா பானு,
புதுத்தெரு கடைக்கார A. அப்துல் ஜலீல் அவர்களின் துணைவியார் மாமாஜி கனி,
கடைக்கார A.அப்துல் ஜலீல் அவர்களின் தங்கையும், பண்டாராவாடை மர்ஹும் P.M. முஹம்மது ஆரிப் அவர்களின் துணைவியார்
ராஜாத்தி (என்கிற) M. தாவுது பீவி
புதுத்தெரு P.M. லியாகத் அலி அவர்களின் துணைவியார்
நர்கிஸ் பானு,
சூபி நகர் மர்ஹும் டிப்பு அபுபக்கர் அவர்களின்
துணைவியார்
ஜுலைஹா கனி,
மற்றும் இவர்களுடன் இறுதிக் கடமையை நிறைவேற்ற இருக்கும் அனைவர்களும் ஹஜ்ஜுக்கடமையும் இனிதே நிறைவேறிடவும், எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவர்களது ஹஜ்ஜையும் அங்கீரைத்து நலமுடன் தாயகம் திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்.

அன்புடன்
A.அப்துல் முத்தலிப்
குவைத்

Sunday, November 16, 2008

100 Questions about The Holy Qura’an

1) What is the meaning of the word 'Holy Qura’an'?
That which is Read.

2) Where was the Holy Qura’an revealed first?
In the cave of Hira (Makkah)

3) On which night was the Holy Qura’an first revealed?
Lailatul-Qadr (Night of the Power)
4) Who revealed the Holy Qura’an?
Allah revealed the Holy Qura’an

5) Through whom was the Holy Qura’an revealed?
Through Angel Jibraeel (Alaihis-Salaam)

6) To whom was the Holy Qura’an revealed?
To the last Prophet, Muhammed (Sallahu Alaihi Wasallam)

7) Who took the responsibility of keeping the Holy Qura’an safe?
Allah himself

8) What are the conditions for holding or touching the Holy Qura’an?
One has to be clean and to be with Wudhu (ablution)

9) Which is the book which is read most?
The Holy Qura’an

10) What is the topic of The Holy Qura’an?
Man

11) What are the other names of the Holy Qura’an according to the Holy Qura’an itself?
A l-Furqaan, Al-Kitaab, Al-Zikr, Al-Noor, Al-Huda

12) How many Makki Surahs (chapters) are there in the Holy Qura’an?
86

13) How many Madani Surahs (chapters) are there in the Holy Qura’an?
28

14) How many Manzils (stages) are there in the Holy Qura’an?
7

15) How many Paara or Juz (parts) are there in the Holy Qura’an?
30

16) How many Surahs (chapters) are there in the Holy Qura’an?
114

17) How many Rukoo (paragraphs) are there in the Holy Qura’an?
540

18) How many Aayaath (verses) are there in the Holy Qura’an?
6666

19) How many times is the word 'Allah' repeated in the Holy Qura’an?
2698

20) How many different types of Aayaath (verses) are there in the Holy Qura’an?
10

21) Who is the first 'Haafiz' of the Holy Qura’an?
Prophet Muhammed (Sallalahu Alaihi Wasallam)

22) At the time of the death of Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam) how many Huffaz were here?
22
23) How many Aayaath (verses) on Sajda are there in the Holy Qura’an?
14

24) In which Paara (part) and Surah (chapter) do you find the first verse about Sajda?
9th Paara, 7th Chapter-Surah- Al-Araaf, Verse 206

25) How many times has the Holy Qura’an stressed about Salaat or Namaaz (prayer)?
700 times

26) How many times has the Holy Qura’an emphasized on alms or charity?
150

27) How many times in the Holy Qura’an, is the Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam) addressed as Yaa-Aiyu-Han- Nabi?
11 times

28) Where in the Holy Qura’an has Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam) been named 'Ahmed'?
Paara 28th, Surah Saff, Ayath 6th

29) How many times has the name of Rasool-ullah (Sallallahu Alaihi Wasallam) been mentioned in the Holy Qura’an?
Muhammed (Sallallahu Alaihi Wasallam)-4times, Ahmed (Sallallahu Alaihi Wasallam)-1 time

30) Name the Prophet whose name is mentionedand discussed most in the Holy Qura’an?
Moosa (Alahis-Salaam)

31) Who were the Kaathibe-Wahi (copyists of the revelations) of the Holy Qura’an?
Abu Bakr (Radhiallahu Anhu), Usman (Radhiallahu Anhu), Ali (Radhiallahu Anhu),

Zaid Bin Harith (Radhiallahu Anhu) And Abdullah bin Masood (Radhiallahu Anhu)
32) Who was the first person who counted the Aayaath (verses) of the Holy Qura’an?
Ayesha (Radhiallahu Anha)

33) On whose advice did Abu Bakr (Radhiallahu Anhu) decide to compile the Holy Qura’an?
Omer Farooq(Radhiallahu Anhu)

34) On whose order was the Holy Qura’an compiled completely in written form?
Abu Bakr (Radhiallahu Anhu)

35) Who confined the recitation of the Holy Qura’an on the style of the Quraysh tribe?
Usman (Radhiallahu Anhu)

36) Out of the copies of the Holy Qura’an compiled by Usman (Radhiallahu Anhu), how many and where are they at present?
Only 2 copies. One in Tashkent and the other in Istanbul.

37) Which Surah of the Holy Qura’an was Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam) reciting while praying, that Hazrat Jabeer Bin Muth'im Listened to and embraced Islam?
Surah Thoor

38) Which was that Surah of the Holy Qura’an which the Prophet Muhammed Sallallahu Alaihi Wasallam) had recited when one of his enemies Utba after listening to it fell in Sajda (prostration) ?
The first five Ayaaths of Ham-Meem-Sajda

39) Which is the first and the most ancient Mosque according to the Holy Qura’an?
The Holy Kaaba

40) In Holy Qura’an mankind is divided into two groups. Which are those two groups?
Believers and Unbelievers

41) Who is the man about whom, Allah has said in the Holy Qura’an that his body is kept as an admonishing example for future generations to come?
Fir'aun. (Pharaoh)

42) Besides the body of Pharaoh, what is that thing which is kept as an admonishing example for future generations to come?
Noah's Ark.

43) After the wreckage of Prophet Noah's Ark, which is its place of rest mentioned in the Holy Qura’an?
Cave of Judi.
44) In the Holy Qura’an the name of which companion of Prophet Muhammed (Sallallahu Alahi Wasallam) is mentioned?
Zaid Bin Harith.

45) Who is the relative of the Prophet Muahmmed (Sallallahu Alaihi Wasallam)
whose name is mentioned in the Holy Qura’an?
Abu Lahab

46) In the Holy Qura’an there is a mention of a Prophet who has been called by his mother's name. Who was he?
Jesus [Prophet Isa (Alahis salaam)] is mentioned as bin Maryam.

47) Which was the agreement that was titled Fath-hum-Mubeen' without fighting a battle?
Treaty of Hudaibiya

48) What are the different names used for Satan or Devil in the Holy Qura’an?
Iblees and Ash-Shaitaan.

49) Which category of creature does the Holy Qura’an put 'Iblees' into?
Jinn.

50) What were those worships and prayers that were ordered by Allah to the community of Bani Israeel and which were continued by the Muslim Ummah also?
Salaat and Zakaat. (Al-Baqarah: 43)

51) The Holy Qura’an repeatedly warns of a certain day. .Can you say which day it is?
Youmal Qiyamah.(Doomsday)

52) Who were those people with whom Allah was pleased and they were pleased with Him, as
mentioned in the Holy Qura’an?
Companions of Prophet Muhammed.(Sallallah u Alaihi Wasallam)

53) In which Holy Book of Non-Muslims the Holy Qura’an mentioned repeatedly?
In the Holy Book of Sikh Community-Granth Saheb.

54) In which year were the vowels inserted in the Holy Qura’an?
43 Hijri.

55) Who were the first serious students of the Holy Qura’an?
As-haabus Suffah.

56) Which is the first Residential University where the faculty of the Holy Qura’an was established for the first time?
Masjid-e-Nabvi. [Mosque of the Prophet (Sallallahu Alaihi Wasallam)]

57) By what name did the Holy Qura’an address those noble and pious people who were selected by Allah to convey His message to mankind?
Nabi (Prophet) and Rasool (Messenger).

58) What type of a person does the Holy Qura’an want to make?
Momin.

59) What is the scale or measure of one's dignity according to the Holy Qura’an?
Thaqwa. (Piety)

60) What according to the Holy Qura’an is the root cause of the evil?
Alcohol.

61) What are the two most important types of kinds of Aayaat (Verses)found in the Holy Qura’an?
Muhakamaat and Muthashabihaath.

62) Which is the longest Surah (Chapter) in the Holy Qura’an?
Surah-al-Baqarah.

63) Which is the smallest Surah in the Holy Qura’an?
Surah-al-Kausar.

64) What was the age of Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam) when Holy Qura’an was first revealed to him through Jibraeel (Alaihis-salaam) ?
40 Years.

65) How long did Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam) receive the revelation of the Holy Qura’an in Makkah?
13 Years.

66) How long did Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam) receive the revelation of the Holy Qura’an in Madinah?
10 Years.

67) Where was the first Surah revealed?
In Makkah.

68) Where was the last Surah revealed?
In Madinah.

69) How many years did it take for the complete revelation of the Holy Qura’an?
22 years, 5 months and 14 days.

70) Which Surah (Chapter) of the Holy Qura’an is to be read compulsorily in each raka'at of the Salaat (Namaaz)?
Surah-al-Fatihah.

71) Which is the Surah, which Allah taught as a Du'a (Prayer) ?
Surah-al-Fatihah.

72) What is the reason of keeping Surah-al-Fatihah in the beginning of the Holy Qura’an?
It is the door to the Holy Qura’an

73) What is the Surah (Chapter) revealed completely and found first place in the Holy Qura’an?
Surah-al-Fatihah.

74) Who was the only lady whose personal name is found in the Holy Qura’an?
Mariam (Alaihis- salaam).

75) In which Surah (Chapter) of the Holy Qura’an do you find maximum instructions?
Surah-al-Baqarah.

76) When and Where did the Prophet Muhammed Sallallahu Alaihi Wasallam) and Jibraeel (Alaihis-salaam) meet for the second time?
On Friday,18th Ramadan, in the Cave of Hira.

77) What was the interval between the first and the second revelation?
2 years and six months.

78) Which is the Surah (Chapter) that does start without Bismillah?
Surah-al-Taubah or Bara'ath.

79) In which Surah (Chapter) of the Holy Qura’an Bismillah is repeated twice?
Surah-al Naml.

80) How many Surah (Chapter) in the Holy Qura’an have the titles named after different Prophets?
6 Surahs (Chapters):
a) Surah-al-Yunus.
b) Surah-al-Hood.
c) Surah-al-Yusuf.
d) Surah-al-Ibraheem.
e) Surah-al-Nuh.
f) Surah-al-Muhammed.

81) In which part of the Holy Qura’an do you find 'Ayat-ul-Kursi' (Verse of the Throne)?
In the beginning of the third Part .(Chapter2-55)

82) How many different names of Allah are mentioned in the Holy Qura’an?
99

83) Who were the three non-prophets whose names are mentioned with due respect in the Holy Qura’an?
Luqman Aziz of Egypt and Zulqarnain.

84) At the time Abu Bakr (Radhiallahu Anhu) how many companions had compiled the Holy Qura’an in the form of a book?
75 companions.

85) Which is that only book which is completely memorized by millions of people in the world?
Al-Holy Qura’an.

86) What did the Jinns who heard a few Aayaath Verses) of the Holy Qura’an say to each other?
We have heard a unique discourse which shows the right path, verily we believe in it.

87) Which are the most popular translations of the Holy Qura’an in English?
Translation by Muhammed Marmaduke Pickthall and by Allama Yusuf Ali.

88) Into how many languages of the world has the Holy Holy Qura’an been translated?
Nearly 103 languages.

89) Who was the first translator of the Holy Holy Qura’an into Urdu?
Moulana Shah Rafiuddin Muhaddis Dehlavi.

90) What will be our condition on 'The day of the Judgment' according to the Holy Qura’an?
Everybody will be in a state of anxiety.

91) Who was the Prophet mentioned in the Holy Qura’an whose three generations were prophets?
Ibraheem (Alaihis-salaam) .

92) What is that book which abolished all old rules and regulations?
Al-Holy Qura’an.

93) What does the Holy Qura’an say about property and wealth?
They are tests of one's faith.

94) According to the Holy Qura’an who is 'Khaatamun Nabiyyeen' (the last of the Prophets)?
Prophet Muhammed (Sallallahu Alaihi Wasallam)

95) What is the name of the book that tells us clearly about the reality of the beginning and the end of the world?
Al-Holy Qura’an.

96) In the Holy Qura’an what other name is given to the city of Makkah?
Bakkah and Baladul Ameen.

97) According to the Holy Qura’an what other name is given to the city of Madinah?
Yathrib.

98) Whose Generation is known as 'Bani Israeel' according to the Holy Qura’an?
The generation of Prophet Yaqoob (Alaihis salaam) who is also known as Israeel.

99) Which are the mosques that are mentioned in the Holy Qura’an
a) Masjid-ul-Haram.
b) Masjid-ul-Zirar.
c) Masjid-ul-Nabawi.
d) Masjid-u l-Aqsa.
e) Masjid Quba.

100) The name of which angels are mentioned in the Holy Qura’an?
a) Jibraeel Ameen.Alaihis salaam)

b) Meekaeel.(Alaihis salaam)
c) Haroot.(Alaihis salaam)
d) Maroot.(Alaihis salaam)

Jazakallah hulukum khair...

Thanks to Abdul Rahman

Tuesday, November 11, 2008

மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!



மௌலான அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ஆம் தேதி தேச கல்வி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார். ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேச கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார். அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர். 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார். 1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தர வர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் ஃபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சங்கீத நாடக அகாடமி (1953), சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத். அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும் அவரின் பிறந்த தினத்தன்று ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும் பணிகளை நினைவு கூர்வோம்.
நன்றி: www.tamil.webdunia.com

Saturday, November 1, 2008

நிலாப் பெண்-குஷ்பூ மிர்ஸா



சந்திராயன் 1 விண்கலம் நிலவில் முதல் அடி எடுத்து வைக்கப் போகும் செய்தி நாடு முழுவதும் மகிழ்ச்சியை விதைத்தது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தின் சௌகோரி முஹல்லா பகுதி மக்கள் கூடுதல் மகிழ்ச்சியிலும் பெரு மிதத்திலும் திளைத்தனர்.
அதற்கு காரணம் அந்த கிராமத்தின் செல்லப் பெண் குஷ்பூ மிர்ஸா. 23 வயதான இவர் சந்திராயன் செக் அவுட் டிவிஷனில் பொறியாளராக விளங்குகிறார். சந்திராயன் 1 விண்கல குழுவில் இவருக்கும் ஓர் இடம் உண்டு.நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கு தொண்டு செய்வதற்காக தான் இளம் பருவத்திலேயே பேரார்வம் கொண்டு விளங்கியதாகக் குறிப்பிடுகிறார்.
முஸ்லிம் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த குஷ்பூ மிர்ஸா உத்தரப் பிரதேச மாநில அலிகார் பல்கலைக் கழகத்தில் பிடெக் பட்டம் பெற்றவராவார்.
இந்தியா விண்வெளி விஞ்ஞானத்துறையில் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. விண்வெளி விஞ்ஞானத்தில் அது ஆசியாவின் மற்றொரு வல்லரசான சீனாவையும் மிஞ்சிவிட்டது.
விஞ்ஞான இந்தியாவின் பெருமையில் குஷ்பூ மிர்ஸாவுக்கும் முக்கிய இடம் உண்டு.
பேகம் ஹஜரத் மஹல் என்ற வீரப் பெண்மணியைத் தந்த உத்தரப் பிரதேச மண் தான் குஷ்பூ மிர்ஸாவையும் தந்துள்ளது.



விண்வெளிப் பெண்ணான கல்பனா சாவ்லா அமெரிக்க மண்ணில் (அமெரிக்காவுக்காக) சாதனை நிகழ்த்தினார். ஆனால் இளம் பெண் குஷ்பூ மிர்ஸா தற்போது தான் விஞ்ஞானத்துறையில் அடியெடுத்து வைக்கும் போதே இந்தியா சாதனை நிகழ்த்தும் சந்திராயன் 1 திட்டத்தில் பங்கேற்றது. தனக்கு கிடைத்த பெரும் பேறாக நினைப்பதாக குஷ்பு கூறுகிறார்.
நிலாப் பெண் குஷ்பு மிர்ஸா சந்திராயன் 1 திட்டத்தில் பணியாற்றும்போது ரமலான் மாதம் நோன்பு நோற்றதோடு தினமும் ஐந்து வேளையும் தவறாது தொழுகையும் நிறைவேற்றியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
குஷ்பு மிர்ஸாவின் திறமையும் புகழும் மேலும் வளர்ந்து தாய் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.

நன்றி : அபூசாலிஹ்




Tuesday, October 21, 2008

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . . . . . . . . . . .


தஞ்சை மாவட்டம், வஞ்சுவழி & வடக்கு மாங்குடி,
வடக்கு தெரு, மவ்லானா மவ்லவி அபுல்ஹுதாஆலிம்
அவர்கள் (முன்னாள் பேஷ் இமாம் - வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்'ஆ பள்ளிவாசல் மற்றும் அய்யம் பேட்டை மதகடி பள்ளிவாசல்) இன்று 21.10.2008 செவ்வாய் கிழமை மதியம் 2.00 மணியளவில் இறைவனடி சென்று விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல ரஹ்மான் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்கள் மறுமை வாழ்வை பிரகாசமாக்கி, நாளை மறுமையில் வசந்தமிகு சுவனப் பூங்காவில் நுழையச்செய்ய ஏக இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.. ஆமீன்.
அபுவஸீமா
குவைத்

Wednesday, September 24, 2008

SOME COLORFUL FACTS - சுப்ஹானல்லாஹ் . . .

1. This image of red blood cells is one of a series appearing in the book Inside The Body: Fantastic Images from Beneath the skin.


2. Here the blood cells are traveling along a vein within the liver.
The images are provided by the Science Photo Library.



3. This bead-like structure with its projecting legs is a nerve cell.
It sends signals and commands to and from the brain.


4. This dirty-looking surface is actually a healthy tooth.
The cells in the green layer produce enamel, which protects the tooth.


5. A cross section of a piece of carpet?
This is actually the small intestine where food is digested.


6. The surface of the tongue is rough due to these paillae,
which contain the taste buds and send tactile information to the brain.


7. The cells lining the stomach secrete a layer of mucus to protect against the acidic gastric juices.



8. These crystals may look pretty, but the kidney stones they form can be extremely painful to pass through the urine.


9. These match-like structures are found in the brain and secrete a substance that cushions the brain and spinal cord against shock.


10. Rose petals scattered on a scarlet divan? This is actually the lining of the rectum.

Sunday, September 21, 2008

BALANCE SHEET OF LIFE


BALANCE SHEET OF LIFE


Our Birth is our Opening Balance!
Our Death is our Closing Balance!
Our Prejudiced Views are our Liabilities.
Our Creative Ideas are our Assets.
Heart is our Current Asset.
Soul is our Fixed Asset.
Brain is our Fixed Deposit.
Thinking is our Current Account.
Achievements are our Capital.
Character & Morals, our Stock-in-Trade.
Friends are our General Reserves.
Values & Behaviors are our Goodwill.
Love is our Dividend.
Children are our Bonus Issues.
Education is Brands / Patents.
Knowledge is our Investment.
Experience is our Premium Account.
The Aim is to Tally the Balance Sheet Accurately.
The Goal is to get the Best Presented Accounts Award.

Some very Good and Very bad things.

The most destructive habit………............ ......... .. Worry
The greatest Joy......... ......... ......... ......... ......... ... Giving
The greatest loss........ ......... ......... .. Loss of self-respect
The most satisfying work........ ......... ..... Helping others
The ugliest personality trait....... ......... ........ Selfishness
The most endangered species..... ..... Dedicated leaders
Our greatest natural resource.... ......... ....... Our youth
The greatest "shot in the arm"............ Encouragement
The greatest problem to overcome…............ ........ Fear
The most effective sleeping pill........ ....Peace of mind
The most crippling failure disease..... ......... .Excuses
The most powerful force in life........ ......... ........Love
The most dangerous pariah...... ......... ......A gossiper
The world's most incredible computer.... ..The brain
The worst thing to be without..... ......... ......Hope
The deadliest weapon...... ......... ........The tongue
The two most power-filled words....... ...."I Can"
The greatest asset....... ......... ......... ......... ....Faith
The most worthless emotion..... ......... ....Self- pity
The most beautiful attire...... ......... ........Smile
The most prized possession.. ......... ......Integrity
The most powerful channel of communication. ....Prayer
The most contagious spirit...... ......... ...Enthusiasm
The most important thing in life........ ......... ALLAH.

Chinese Proverb:
"When someone shares something of value with you and you benefit from it, you have a moral obligation to share it with others"

Wednesday, September 17, 2008

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11. அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் - பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13. மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் - இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14. எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15. மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் – எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16. எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் – சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17. நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18. குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19. மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20. நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21. நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22. மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24. மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் - குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25. அச்சம் தவிருங்கள்.

26. இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27. நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28. ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒன்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29. வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30. எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

நன்றி - இணைய நண்பன் ராஜா

Monday, September 15, 2008

குவைத்தில் தினமலம்(ர்) தடை! குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கம் (K-Tic) நடவடிக்கை!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

இங்கே இன்னொரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பாக குவைத் நாட்டில் தினமல(ம்)ர் இதழ் இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று குவைத் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் 13.08.2008 (சனிக்கிழமை) முதல் அந்த பார்ப்பண நாளிதழ் குவைத் நாட்டில் நுழைவதற்கு தடை விதித்து விட்டது.
அல்ஹம்து லில்லாஹ்...

இதுபோன்றே எல்லா நாடுகளிலும் தடை செய்ய நாம் முன்வர வேண்டும்.

-- என்றும் மாறா அன்புடன்...குவைத்திலிருந்து... பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Thursday, September 11, 2008

செயலும் விளைவும்

அன்றும், இன்றும்

இஸ்லாத்திற்காக

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
- இஸ்லாம் அனைத்து மண்ணையும் மீட்கொண்டது..

பிலால் (ரழி) அவர்கள் நெஞ்சின் மீது பாறாங்கற்களை தாங்கினார்கள்
- உறுதியான ஈமானிய நெஞ்சங்கள் உருவானது

கப்பாப் (ரழி) அவர்கள் எரிதழலில் பிணைக்கப்பட்டார்கள்
- இஸ்லாம் சூரிய ஒளியாக பிரகாசித்தது

குபைப் (ரழி) தூக்கு கயிற்றை முத்தமிட்டார்கள்
- அல்லாஹ்வின் கயிற்றை ஆயிராமாயிரம் பேர் முத்தமிடுகிறார்கள்

முஸ்அப் பின் உமைர் (ரழி) அவர்கள் சொத்துக்களை தூக்கி எறிந்தார்கள்
- சாம்ராஜ்ஜியங்கள் மண்டியிட்டன

யாஸிர் (ரழி) இரு கூறாக பிளக்கப்பட்டார்கள்
- இன்றும் யாஸிர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.

ஹம்ஸா (ரழி) அவர்களின் ஈரல் துண்டாடப்பட்டது
- ஈமானிய சாரல்கள் பொழிந்து கொண்டிருக்கிறது...

அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தி அடைவான்
அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள் –
98:8

தியாகங்களால் வளர்ந்தது இஸ்லாம். செந்நீரை தண்ணீராக ஊற்றி வளர்ந்த மார்க்கம். என்ன செய்கிறோம் நாம்?

நன்றி: இஸ்லாமிய நூலகம், துபை

Wednesday, September 10, 2008

இன்றைய நட்பு . . . . .






















நன்றி: நண்பர் கமால்தீன்

Monday, September 8, 2008

பணக்கார இந்தியா

இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கியில்

நாம் அனைவரும் நிணைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இந்தியா ஏழை நாடு அல்ல. ஆமாம். 100 சதவிகித 'அக்மார்க' உண்மை நம்ப முடியவில்லையா?..தொடர்ந்து படியுங்கள்.

இந்திய மக்களிடமிருந்து ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து, கணக்கு காட்டாமல் சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு (Swiss Banking Association) தனது ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த தொகை உலக வங்கி (World Bank), உலக நிதி நிறுவனம் (International Monetary Fund), மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது வளர்ச்சி திட்டங்களுக்கக வாங்கியிருக்கும் வெளிநாட்டு கடனின் மொத்த மதிப்பைவிட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் ‘யோக்கிய சிகாமனிகள்' யார் தெரியுமா?

நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் அர்சியல் வாதிகள்தான்.

உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்திய வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020 ஆண்டு, இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு காணச்சொல்லியிருக்கிறார். ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த விஷயம், ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத இந்தியாவின் வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும் என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது,

சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு தங்கம் பெற்ற இந்தியா, ஸ்விஸ் வங்கியில் 'கள்ள' கணக்கு வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளில் - முதலிடத்தை தட்டி செல்கிறது.

1. இந்தியா---- $1,456 billion
2. ரஷ்யா---$ 470 billion
3. UK -------$390 billion
4. உக்ரைன் - $100 billion
5. சீனா -----$ 96 billion


அது மட்டுமல்ல, இந்தியாவின் வைப்புத்தொகை ($1456 பில்லியன்) - மற்ற நான்கு நாடுகளின் மொத்த வைப்புத்தொகையை ($1056 பில்லியன்) விட அதிகம்.

இந்த பணத்தை இந்திய மக்களுக்கு பிரித்துக்கொடுத்தால், 45 கோடி பேருக்கு - ஒவ்வொருவருக்கும் 1,00,000 ரூபாய் கிடைக்குமாம்..

இந்திய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை, இந்தியா சட்ட ரீதியாக நடவடிகையெடுத்து மீண்டும் $1456 பில்லியன் பணமும் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டால் ஒரே நாளில் நமது வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு, மீதியிருக்கும் பணத்தை Fixed Deposit -ல் போட்டால், அதிலிருந்து வரும் வட்டி - இந்திய அரசின வருடாந்திர 'பட்ஜெட்' க்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக கிடைக்குமாம். அதனால், துண்டு விழாத பட்ஜெட் போடலாம், புதிய வரிகள் போடுவதை தவிர்க்கலாம்,

வறுமைகோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களை அப்படியே 'அலாக்'காக துக்கி (வறுமை) கோட்டுக்கு மேலே வைத்து 'கோட்டும்- சூட்டும்' போட்டு பார்க்கலாம்.

(இதை எழுத உதவிய சுட்டிகள்)
http://www.merinews .com/catFull. jsp?articleID= 137213&catID=10&category=Reviews
http://evirtualpie.com/?q=node/434

நன்றி.
பிறைநதிபுரத்தான்