Thursday, December 4, 2008

சிந்தியுங்கள் . . .

வேண்டாம் டிசம்பர்-06 ம் நாள் (வெற்று) கோஷப் போராட்டம்

அருமையான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். . .

1992 ம் வருடம் டிசம்பர் 6 ம் நாள் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடூர நாள். அந்த நாளை எந்த ஒரு முஸ்லிமாலும் மறக்க முடியாத கருப்பு நாள். இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு இந்து மத வெறியர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட நாள்.

டிசம்பர்-06 ம் நாளை அமைதி நாளாக, சமூக நல்லிணக்க நாளாக, உறுதிமொழி ஏற்கும் நாளாக கடைபிடியுங்கள். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இந்த டிசம்பர்-06 ம் நாளை இஸ்லாம் காட்டித்தரும் வழியில் கடைபிடியுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் போர் வீரர்களுக்கு உதவி செய்வதற்காகத் தான் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்களேத் தவிர ஆண்களுக்கு இணையாக போராட்டத்தில் கலந்துக்கொள்ள அல்ல என்பதை உணர வேண்டும்.

பெண்களை கண்ணியமாக கருதும் இஸ்லாம் ஒருபோதும் போராட்டத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.

பெண்களை அழைத்து போராடும் எந்த ஒரு இஸ்லாமிய அமைப்பும் வீரியம் நிறைந்த அமைப்பாக இருக்கமுடியாது. போராடுவதால் விழிப்புணர்வு ஏற்படும் என்று சொல்வதும் மடமையாகும். விழிப்புணர்வு போராட்டத்தில் இல்லை.

பெண்கள் சத்தமாகக்கூட அன்னிய ஆடவர்களுக்கு முன்னால் பேசக்கூடாது என்று சொல்லும் மார்க்கத்தில் கோஷம் போட அனுமதி உண்டா? பெண்கள் பூசும் நறுமணம்கூட அன்னிய ஆடவர்களுக்கு படாதவாறு இருக்கவேண்டும் என்று சொன்ன மார்க்கத்தில் ஆடவர்களோடு இணைந்து போராட அனுமதி கொடுத்தது யார்?

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மட்டுமல்ல எந்த ஒரு போராட்டத்திலும் பெண்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. அப்படி அனுமதிமட்டுமிருக்குமேயானால் நம் உயிரிலும் மேலான தலைவர், அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைப்பெற்ற இஸலாமிய முதல் யுத்தமான பத்றுப் போரில் சத்திய ஸஹாபா பெருமக்கள் தங்கள் மனைவி மற்றும் பெண் மக்களை கலந்துக் கொள்ள செய்திருப்பார்கள்.

அருமையான முஸ்லிம்களே சிந்தியுங்கள்.


நம் உயிரிலும் மேலான தலைவர், அல்லாஹ்வின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைப்பெற்ற எந்தப் போரிலாவது பெண்கள் கலந்து கொண்டிருக்கிறார்களா? ஆகவே பெண்களை கண்ணியமாக நடத்துங்கள். பெண்களை போராட்டக் கள பாதுகாப்பு அரணாக நிறுத்திவிடாதீர்கள்.

இஸலாம் கூறும் வழியில் போராடி பாபரி மஸ்ஜிதை இடித்தவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கக்கூடியவர்களுக்கும் பாடம் கற்பியுங்கள்.

இஸ்லாம் கூறும் வழியில் போராடினால் இழந்தவைகளும் திரும்பும் முஸ்லிம்களுக்கு தீங்கிழைத்தவர்களும் ஹிதாயத் பெற (அல்லாஹ் நாடினால்) வாய்ப்பு ஏற்படும்

நன்றி:அபூ மஹ்தி

No comments: